×

அடுத்த ஜென்மத்தில் இந்த வேலை தான் பார்ப்பேன்: நடிகை வரலட்சுமி ட்வீட்!

நடிகை வரலட்சுமி தனது அடித்த ஜென்மத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பது பற்றி கூறியுள்ளார். சென்னை: நடிகை வரலட்சுமி தனது அடித்த ஜென்மத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பது பற்றி கூறியுள்ளார். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையெல்லாம் இல்லாமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை வரலட்சுமி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சர்கார், மாரி 2 போன்ற படங்களை நல்ல வரவேற்பைப் பெற்றன. அதையடுத்து இவர் தற்போது ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’
 

நடிகை வரலட்சுமி தனது அடித்த ஜென்மத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பது பற்றி கூறியுள்ளார். 

சென்னை: நடிகை வரலட்சுமி தனது அடித்த ஜென்மத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பது பற்றி கூறியுள்ளார். 

கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையெல்லாம் இல்லாமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச்  சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை வரலட்சுமி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சர்கார், மாரி 2 போன்ற படங்களை நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதையடுத்து இவர் தற்போது ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக  நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது தொழிலை மிகவும் நேசிக்கும் நடிகை வரலட்சுமி, ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கம்பீரமான ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் இருப்பது போன்ற ஒரு சில நொடி வீடியோ காட்சி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘அடுத்த ஜென்மத்தில் காவல் துறை அதிகாரியாக விரும்புகிறேன். ராஜ பார்வையில் என் பணியை நேசிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் எனது இயக்குநர்களுக்கு நன்றி. நான் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும் அதை அன்போடு ஏற்றுக்கொள்ளும் ரசிகர்களுக்கு நன்றி. அதுதான் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு எதிராக குரல் எழுப்பிய விஷால்