×

அஜீத் பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63

பிடிக்கிறதோ இல்லையோ சிலசமயம் அஜீத் வழியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுவிடுகிறது. சென்னை: பிடிக்கிறதோ இல்லையோ சிலசமயம் அஜீத் வழியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுவிடுகிறது. லேட்டஸ்டாக விஜய் 63 படத்துக்கும் அஜீத் பாணியில் ஒரு அதிரடி முடிவெடுத்திருக்கிறார் தளபதி. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. படத்தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் அட்லியும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது,
 

பிடிக்கிறதோ இல்லையோ சிலசமயம் அஜீத் வழியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுவிடுகிறது.

சென்னை:  பிடிக்கிறதோ இல்லையோ சிலசமயம் அஜீத் வழியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுவிடுகிறது. லேட்டஸ்டாக விஜய் 63 படத்துக்கும் அஜீத் பாணியில் ஒரு அதிரடி முடிவெடுத்திருக்கிறார் தளபதி.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. படத்தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் அட்லியும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் பாட்டாளிகளின் பங்காளி அவதாரம் எடுத்ததால் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பிசியான  பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் சென்னையில் லைவ் லொகேஷன்களில் குறிப்பாக  காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைக்கவேண்டி வந்தது.மட்டுமன்றி  அதே போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால் பலமுறை நினைத்த காட்சிகளை எடுக்கமுடியாமல் படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்படி அடிக்கடி படப்பிடிப்பு தடைபட்டதால் சற்று அப்செட் ஆன விஜய் சின்னதாக ஓரு ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றிருந்தார். அந்த ஓய்வு முடிந்து அவர்  விரைவில் திரும்பவுள்ளதைத் தொடர்ந்து ‘தளபதி 63’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இனி ரிஸ்க் எடுக்கும் எண்ணமின்றி மீதமுள்ள படப்பிடிப்புகள்  முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெறவுள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

என்று அல்டிமேட் ஸ்டாராக மாறினாரோ அன்றிலிருந்தே அஜீத் சென்னையிலோ தமிழகத்திலோ பெரும்பாலும் லைவ் லொகேஷன்களில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வதில்லை. மதுரை, தேனி வட்டாரங்களில் நடந்த விஸ்வாசம் பட ஷூட்டிங்கைக் கூட வேறு மாநிலத்தில் வைத்துக்கொண்டவர் அஜீத். தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படமும் முழுக்க முழுக்க ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே நடந்துவருகிறது.தளபதி 63க்குப் பின்னர் இனி விஜய் படங்களின் ஷூட்டிங்கும் வேறு மாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் வாய்ப்பே அதிகமாம்.

இதையும் வாசிக்க: அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva