×

அஜித்தின் வீரம்…சங்கத்தமிழனுக்கு சிக்கல்…எப்போது வெளியாகும்?

கைதி, பிகில் போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளிப்போனது. இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

கைதி, பிகில்  போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளிப்போனது.

இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  படம் ‘சங்கத்தமிழன்’. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்  இவர்களுடன் சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  ஏற்கனவே கைதி, பிகில்  போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து   சங்கத்தமிழன் இன்று  (நவம்பர் 15)  ரிலீசாகும் என்று லிப்ரா புரொடக்‌ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் அறிவித்திருந்தார். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்திலிருந்தனர். 

 

இந்நிலையில்  சங்கத்தமிழன்  திரைப்படம் இன்றும் வெளியாகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்  வீரம் படத்தின் போது செங்கல்பட்டு ஏரியாவை ரூ.85 லட்சம் கொடுத்து ராமநாராயணன் வாங்கியிருந்தார். ஆனால்  திடீரென்று படத்தை தான் விநியோகிக்கவில்லை என்று கடைசி நேரத்தில் கைவிரித்துள்ளார். இருப்பினும் கொடுத்த பணத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து  ராமநாராயணன் திருப்பி வாங்கவில்லை. அடுத்தது விஜய்யின் பைரவா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் விஜயா புரொடக்ஷன்ஸ் தரவேண்டிய பணபாக்கியானது நிலுவையில் இருந்து வந்துள்ளது.  தற்போது அது சங்கத்தமிழன் பட ரிலீஸில் எதிரொலித்துள்ளது.

இருப்பினும்  தொடர்ந்து பேச்சுவார்தை நடைபெற்று வருவதால் இன்று மாலையே படத்தின் ஈவ்னிங் ஷோ திரையிடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.