×

‘சொல்ல வார்த்தையில்லை.. ஐயா நம்மை விட்டு சென்று விட்டார்’ நடிகர் யோகி பாபு உருக்கம்!

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு நடிகர் யோகி பாபு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான திரு.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1 மணிக்கு உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பேரிழப்பாகவே கருதப்படுகிறது. இனி அந்த குரலை எப்படி கேட்போம், குழந்தைத் தனமான அவரின் சிரிப்பை இனி எப்போது பார்ப்போம் என்றெல்லாம் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது
 

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு நடிகர் யோகி பாபு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான திரு.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1 மணிக்கு உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பேரிழப்பாகவே கருதப்படுகிறது. இனி அந்த குரலை எப்படி கேட்போம், குழந்தைத் தனமான அவரின் சிரிப்பை இனி எப்போது பார்ப்போம் என்றெல்லாம் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் யோகி பாபு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “சொல்ல வார்த்தையில்லை. எஸ்பிபி ஐயா நம்மை விட்டு பிரிந்து விட்டார். நாடு முழுவதும் உள்ள மக்களை தனது குரலால் ஆனந்தப்படுத்திய எஸ்பிபி இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறியிருக்கிறார்.