×

‘சுஷாந்த்தை தொடர்ந்து’… உயிரை மாய்த்துக் கொண்ட இளம் டிவி நடிகர்; அதிர்ச்சியில் திரையுலகினர்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த். இவர் நடித்த தோனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, மக்களின் மனதில் இடம்பெறச் செய்தது. ஆனால் சமீபத்தில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது. சுஷாந்த்தின் மரணத்தை தொடர்ந்து, கன்னட சீரியல் நடிகரான சுஷில் கவுடா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சியில்
 

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த். இவர் நடித்த தோனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, மக்களின் மனதில் இடம்பெறச் செய்தது. ஆனால் சமீபத்தில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது. சுஷாந்த்தின் மரணத்தை தொடர்ந்து, கன்னட சீரியல் நடிகரான சுஷில் கவுடா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சியில் நடித்து வரும் இவருக்கு வயது 36. சுஷிலை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் கடந்த 6 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாண்டியாவிலுள்ள அவரது வீட்டில் சுஷில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷிலின் மரணம் கன்னட தொலைக்காட்சி திரை நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.