×

‘எஸ்.பி.பியின் சிகிச்சைக்கான கட்டணம் பற்றிய வதந்தி’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த சரண்!

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும் என எஸ்.பி.பியின் மகன் சரண் தெரிவித்துள்ளார். 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் கடந்த சனிக்கிழமை தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் மறைவு ரசிகர்களிடையே மீளாத்துயரை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது மருத்துவக் கட்டணம் தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகள் பரவியது. அதாவது மருத்துவத்திற்கு அதிகப்படியான கட்டணம் கேட்டதாகவும், அதனை
 

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும் என எஸ்.பி.பியின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் கடந்த சனிக்கிழமை தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் மறைவு ரசிகர்களிடையே மீளாத்துயரை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது மருத்துவக் கட்டணம் தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகள் பரவியது.

அதாவது மருத்துவத்திற்கு அதிகப்படியான கட்டணம் கேட்டதாகவும், அதனை எஸ்பிபியின் குடும்பத்தினரால் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.இதனை அறிந்த எஸ்பிபி மகன் சரண், வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அந்த வீடியோவில், இணையதளத்தில் வெளியாகும் எல்லா செய்திகளும் பொய்யானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபி-யை அக்கறையுடன் கவனித்துக் கொண்டதாகவும் அவருக்கு சேவை புரிந்த எல்லா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் இன்றும் நினைத்து பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், எஸ்பிபியின் மருத்துவ கட்டணம் தொடர்பான விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.