×

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ. 45 லட்சம் கையாடல் : போலீசில் பரபரப்பு புகார்!

பிரபல நடிகர் விஷால், ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கே ஜி எஃப், ஆம்பள உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இவர் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் விஷாலின் தயாரிப்பு அலுவலக மேலாளர் ஹரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்த ரம்யா என்பவர் சிறுக சிறுக
 

பிரபல நடிகர் விஷால், ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கே ஜி எஃப், ஆம்பள உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இவர் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் விஷாலின் தயாரிப்பு அலுவலக மேலாளர் ஹரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்த ரம்யா என்பவர் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை வைத்து அவர் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்து இருக்கலாம் என்றும் அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் துறைக்கு வடபழனி உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது