×

Production No 5 அப்டேட்: மீண்டும் இணைகிறது நாடோடிகள் 2 படக்குழு! 

நாடோடிகள் 2 படக்குழுவினர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரியுள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை: நாடோடிகள் 2 படக்குழுவினர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரியுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடோடிகள் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி. சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி என்று ஒரு பட்டாளமே நடித்துள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் அனைத்துமே முடிவடைந்து தற்போது வெளியாக தயாராகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளான
 

நாடோடிகள் 2 படக்குழுவினர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரியுள்ளதாக அறிவித்துள்ளனர். 

சென்னை: நாடோடிகள் 2 படக்குழுவினர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரியுள்ளதாக அறிவித்துள்ளனர். 

நாடோடிகள் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி. சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி என்று ஒரு பட்டாளமே நடித்துள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் அனைத்துமே முடிவடைந்து தற்போது வெளியாக தயாராகவுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளான நேற்று, தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் இணைகிறார்கள். அந்த பதிவில் production #5 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடோடிகள் 2 படத்தில் நடித்துள்ள  அஞ்சலி மற்றும் அதுல்யா இருவரும் மீண்டும் இணைகிறார்கள். 

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட ‘நாடோடிகள் 2’ படக்குழு தான் இதிலும் இணைகிறது. ‘வெல்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார் சமுத்திரக்கனி. என்ன தான் சமுத்திரக்கனி படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், இயக்கத்தில் தொடர்ந்து தனத்தை கவனத்தை செலுத்தி தான் வருகிறார்.