×

தாயான பிரியங்கா சோப்ரா.. முதல் குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அறிவிப்பு..

 


நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.  

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற இவர், நடிகர் விஜய்யுடன் ‘தமிழன்’ படம் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து பாலிவுட்டுக்கு குடிபெயர்ந்துவிட்ட பிரியங்கா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து அங்கு உச்ச நட்சத்திரமானார்.  பின்னர் ஹாலிவுட்டில் கால்பதித்த அவர், அங்கு குவாண்டிகோ தொலைக்காட்சி தொடர் மூலம் உலகப்புகழ் பெற்றார்.

இதற்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது இளையவரான பாப் பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார்.  ஒரே பல முன்னணி பாலிவுட் பிரபலங்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் திருமணத்தை நடத்தி வந்த நிலையில்,  பிரியங்கா வித்தியாசமாக  ஜோத்பூர் அரண்மணையில் பிரம்மாண்டமாக  நடத்தினார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும்  பிஸியாக நடித்து வருகிறார்.  

இந்நிலையில்   பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர்கள்,   வாடகைத்தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இனி தங்களது குடும்பத்தில் கவனம் செலுத்த உள்ளதால், எங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க  வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.