×

N4 படத்திலிருந்து வெளியேறிய வாணி போஜன்! காரணம் இது தான்?

நடிகை வாணி போஜன் என் 4 படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை: நடிகை வாணி போஜன் என் 4 படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் இயக்கியுள்ள ‘N4’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். மைக்கேல் தங்கதுரை ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து அனுபமா குமார், அபிஷேக் ஷங்கர், வடிவுக்கரசி, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அஃப்சல் ஹமீது, வினுஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 

நடிகை வாணி போஜன் என் 4 படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகை வாணி போஜன் என் 4 படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் இயக்கியுள்ள ‘N4’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். மைக்கேல் தங்கதுரை ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து அனுபமா குமார், அபிஷேக் ஷங்கர், வடிவுக்கரசி, விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அஃப்சல் ஹமீது, வினுஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காசிமேடு பகுதியை மையமாகக் கொண்டு திரில்லர் ஜானரில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது நடிகை வாணி போஜன் இதிலிருந்து விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சனை தொடர்பாக இதிலிருந்து அவர் விலகிவிட்டாராம். அவருக்கு பதில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் ஹீரோயின் சரண்யா இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதை சரண்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைப்படங்களில் நடித்தாலும், சீரியல் பணிகளும் போய்க் கொண்டு தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.