×

புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகை: மருந்து செலவுக்கு கூட பணமில்லாத பரிதாப நிலை!

தனக்கு மார்பக புற்றுநோய் தயவு செய்து உதவி பண்ணுங்க என்று கலக்கத்துடன் கூறியுள்ளார் நடிகை சிந்து. உடல் ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியம். நாம் படுத்து விட்டால் பார்க்க ஆளு இல்லை என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். அதை வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் சிலர் கற்று கொள்கின்றனர். அப்படி ஒருவராகத் தான் நடிகை சிந்து நம் முன் வந்து நிற்கிறார். இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமானவர்களில் சிந்துவும் ஒருவர்.
 

தனக்கு மார்பக புற்றுநோய் தயவு செய்து உதவி பண்ணுங்க என்று கலக்கத்துடன் கூறியுள்ளார் நடிகை சிந்து.

உடல் ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியம். நாம் படுத்து விட்டால் பார்க்க ஆளு இல்லை என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். அதை வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் சிலர் கற்று கொள்கின்றனர். அப்படி ஒருவராகத் தான் நடிகை சிந்து நம் முன் வந்து நிற்கிறார்.

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு படத்தில் நடித்து பிரபலமானவர்களில் சிந்துவும் ஒருவர். இதை தொடர்ந்து படங்கள், சீரியல் என நடித்து வந்த இவருக்கு கொரோனாவை விட ஓர் பேரதிர்ச்சி வந்து சேர்ந்துள்ளது. உடல்நல குறைவால் மருத்துவமனை சென்ற அவருக்கு மார்பக புற்றுநோய் என்பது தெரியவர உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் கொரோனா பேரிடரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட அவருக்கு புற்றுநோய் வேகமாகப் பரவியுள்ளது. பின்னர் பலரின் உதவிடன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தற்போது மருந்து செலவுக்கு பணமில்லாமல் போராடி வருகிறார்.

‘பலருக்கும் நான் உதவி இருக்கிறேன். எனக்கு ஒரு ஆபத்து வந்த போது உடன் இருந்தவர்கள் ஓடி விட்டனர். மாத்திரை, ஊசி செலவு ஆயிரக்கணக்கில் உள்ளது. மனரீதியாகவும் பணரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு உதவி பண்ணுங்க’ என்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே நடிகை சிந்துவுக்கு நடிகர் கார்த்தி, ஐசரி கணேஷ், ரோபோ சங்கர், சோனியா போஸ் வெங்கட், நடிகர் சவுந்தர் உள்ளிட்டோர் உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.