×

எஸ்.பி.பி-யின் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, பாடகர் மனோ அஞ்சலி!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதனிடையே திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா எஸ்பிபி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ, இயக்குநர் அமீர்
 

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதனிடையே திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா எஸ்பிபி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் எஸ்பிபி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பண்ணை வீட்டில் உள்ள எஸ்பிபி உடல் இன்னும் சற்று நேரத்தில் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.