×

பாடும் நிலா எஸ்.பிபிக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – இயக்குனர் பாரதிராஜா

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரப்பிடியில் பிரபல பாடகர் எஸ்.பிபியும் சிக்கினார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை, மோசமடைந்து வருவதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது பாட்டால் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த எஸ்.பிபி கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான அந்த செய்தி மக்களை அதிர்ச்சி அடையச்செய்தது. இசை அவரை நிச்சயம் மீட்டு, எங்களை மகிழ்விக்க திரும்ப வரும் என எஸ்பிபியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதே போல அரசியல்
 

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரப்பிடியில் பிரபல பாடகர் எஸ்.பிபியும் சிக்கினார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை, மோசமடைந்து வருவதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனது பாட்டால் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த எஸ்.பிபி கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான அந்த செய்தி மக்களை அதிர்ச்சி அடையச்செய்தது. இசை அவரை நிச்சயம் மீட்டு, எங்களை மகிழ்விக்க திரும்ப வரும் என எஸ்பிபியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதே போல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் எஸ்.பிபியின் நெருங்கிய நண்பர்களும் அவர் மீண்டு வர வேண்டும் என வீடியோ வெளியிட்டிருந்தனர். இயக்குனர் பாரதிராஜாவின் கோரிக்கைக்கு இணங்க கடந்த 20 ஆம் தேதி மாலை 6 முதல் 6.05 மணி வரையில் எஸ்.பிபிக்காக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என கோடான கோடி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தற்போது, எஸ்.பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது கோரிக்கைக்கு இணங்க பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர்,அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர், மத்திய அமைச்சர், புதுச்சேரி முதல்வர், இளையராஜா, ரஜினி, சிவகுமார், சூர்யா, விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்றும் எஸ்.பிபிக்காகவும் கொரோனா பிடியில் சிக்கியுள்ள மக்கள் எல்லாரும் மீண்டு வர பிரார்த்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.