×

“ரஹ்மானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்” : ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்!

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். தேசிய விருது, ஆஸ்கர் விருது என பல விருதுகளை தன்வசப்படுத்தி இசை பிரியர்களை கட்டிப்போட்ட வித்தைக்கு சொந்தக்காரர். 9 வயது இருக்கும்போதே இவரின் தந்தை ஆர்.கே.சேகர் இறந்துவிட தாயார் அரவணைப்பில் வளர்ந்தார் ரஹ்மான். தனது அம்மா தான் தனக்கு சூப்பர் ஸ்டார். அவர் இல்லாவிட்டால் தான் இசையமைப்பாளராகி
 

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். தேசிய விருது, ஆஸ்கர் விருது என பல விருதுகளை தன்வசப்படுத்தி இசை பிரியர்களை கட்டிப்போட்ட வித்தைக்கு சொந்தக்காரர்.

9 வயது இருக்கும்போதே இவரின் தந்தை ஆர்.கே.சேகர் இறந்துவிட தாயார் அரவணைப்பில் வளர்ந்தார் ரஹ்மான். தனது அம்மா தான் தனக்கு சூப்பர் ஸ்டார். அவர் இல்லாவிட்டால் தான் இசையமைப்பாளராகி இருக்க முடியாது என்று மறக்காமல் பதிவு செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.அவருக்கு வயது 73. அம்மாவின் மறைவை அடுத்து அவரின் புகைப்படத்தை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! ” என்று பதிவிட்டுள்ளார்.