×

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி தாருங்கள்: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் !

கொரோனா தொற்றின் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கு இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். குறிப்பாக திரைத்துறையும், சினிமா கலைஞர்களும் முடங்கி போயுள்ளனர். பல படங்கள் வெளியிட முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. பாதியில் நின்ற படப்பிடிப்புகள் அரசு அறிவிப்பு வெளியிடாததால் அதன் படக்குழுக்கள் விழிபிதுங்கி உள்ளன. இருப்பினும் இத்தகையை சூழலில் சின்னதிரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்த நிலையில் படப்பிடிப்பு அரசு விதிமுறைகளின் படி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 

கொரோனா தொற்றின் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கு இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். குறிப்பாக திரைத்துறையும், சினிமா கலைஞர்களும் முடங்கி போயுள்ளனர்.

பல படங்கள் வெளியிட முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. பாதியில் நின்ற படப்பிடிப்புகள் அரசு அறிவிப்பு வெளியிடாததால் அதன் படக்குழுக்கள் விழிபிதுங்கி உள்ளன. இருப்பினும் இத்தகையை சூழலில் சின்னதிரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்த நிலையில் படப்பிடிப்பு அரசு விதிமுறைகளின் படி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது போல் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர். கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி தந்தால் அதனை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் ஜூலை மாதம் அனுமதி கேட்டதற்கு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அனுமதி தருவதாக கூறினார்கள் என்றார். மேலும் சூரரைப் போற்று ரிலீஸ் விவகாரம் குறித்த கேள்விக்கு, ஓடிடியோ, டிவியோ, தியேட்டரோ எதிலுமே சண்டைகள் இன்றி படங்களை வெளியிடலாம்” என்று விளக்கமளித்தார்.