×

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அனைத்து திரையரங்குகளும் நாளை மூடப்படும்- அர்ச்சனா கல்பாத்தி

சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அனைத்து திரையரங்குகளும் நாளை மூடப்படும் என அந்நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் கம்பனி ஏ.ஜி.எஸ். இவர்கள் கடந்த ஆண்டு, விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் பிகில் திரைப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் சென்னையில் திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அனைத்து திரையரங்குகளும், அலுவலங்களும்
 

சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அனைத்து திரையரங்குகளும் நாளை மூடப்படும் என அந்நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் கம்பனி ஏ.ஜி.எஸ். இவர்கள் கடந்த ஆண்டு, விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் பிகில் திரைப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் சென்னையில் திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அனைத்து திரையரங்குகளும், அலுவலங்களும் நாளை மூடப்படும் என அந்நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். நிவர் புயலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் , அனைவரும் அவரவர் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் ட்விட்டரில் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளார்.