×

நடிகை வனிதா-பீட்டர் பால் திருமண சர்ச்சை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் பீட்டர் பால் மனைவி புகார்!

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக அவர் புகார் கூறினார். இதற்கு பதிலளித்த வனிதா, அவர்
 

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக அவர் புகார் கூறினார். இதற்கு பதிலளித்த வனிதா, அவர் பணத்திற்காக இப்படி செய்கிறார். நாங்கள் சட்டரீதியாக வழக்கை சந்திப்போம் என்றார்.

இந்நிலையில் நடிகை வனிதா, திருமணம் செய்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி கணவருக்கு எதிராக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது கணவர் பீட்டர் பால் முறையாக என்னை விவாகரத்து செய்யாமல் நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து திருமணத்திற்கு முன்பே நான் வடபழனி போலீசில் புகார் அளித்தேன். காவல் ஆய்வாளர் ரேணுகா, புகாரை முறையாக விசாரித்து இருந்தால், திருமணம் நடந்திருக்காது. போலீசார் ஒரு சார்பாக செயல்படுவதால் தனக்கு நியாயம் கிடைக்காது. இதனால் வேறு ஒரு காவல் ஆய்வாளரை வைத்து தனது புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.