×

பிரபல நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் : அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வரும் இவர் வித்தகன், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வருகிறார் இதுதவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை பூர்ணா தற்போது ஊரடங்கு காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் உள்ளார்.
 

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வரும் இவர் வித்தகன், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வருகிறார் இதுதவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை பூர்ணா தற்போது ஊரடங்கு காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் நடிகை பூர்ணாவின் தாய் மராடு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில் சிலர் தங்களை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் , தங்களைக் கொன்று விடுவோம் என்று கூறுவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பூர்ணா குடும்பத்தை மிரட்டிய நான்கு நபரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்த விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி தனது புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரபிக்கும் பூர்ணா வீட்டினரும் நன்றாக பழக தொடங்கியுள்ளனர். இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி நடிகை பூர்ணா வீட்டுக்கு வந்த ரபீக் உட்பட 6 பேர் திருமணம் பற்றி பேசுவது போல் வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பூர்ணாவிடம் ரூபாய் ஒரு லட்சம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பூர்ணா குடும்பத்தினர் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து உதவியுடன் உங்களை அழித்து விடுவோம் என்று கூறி அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த வழக்கில் திருச்சூரை சேர்ந்த ரபிக், சரத், அஷ்ரப் ,ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள நடிகை பூர்ணா இது பணம் பறிக்கும் கும்பல் என்பதை உலகிற்கு தெரியப்படுத்தவே புகார் அளித்தோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பணம் பறிக்கும் கும்பல் மிரட்டி பணம் பறிக்க முயன்று இருப்பது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.