நடிகர் சீயான் விக்ரம் இனி ‘தாத்தா’ விக்ரம்!
நடிகர் சியான் விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய போகிறது. அதேபோல் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இதனிடையே சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விக்ரம் தாத்தா ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். விக்ரமை ரசிகர்கள் செல்லமாக சீயான் என்று கூறி வரும் நிலையில் சீயான் என்றால் கிராமத்தில் தாத்தா என்று அர்த்தம் என்ற நிலையில் பெயருக்கேற்றவாறு உண்மையிலேயே விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகிறார்.