×

எஸ்பிபி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டப்படும் : மகன் எஸ்.பி.பி. சரண் அறிவிப்பு!

மறைந்த எஸ்பிபிக்கு தாமரைப்பாக்கத்தில் நினைவிடம் கட்டப்படும் என அவரது மகன் சரண் அறிவித்துள்ளார். பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் எனபலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் . இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்பிபி மகனும் பாடகருமான எஸ்பிபி சரண், “எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் எஸ்பிபி
 

மறைந்த எஸ்பிபிக்கு தாமரைப்பாக்கத்தில் நினைவிடம் கட்டப்படும் என அவரது மகன் சரண் அறிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் எனபலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் .

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்பிபி மகனும் பாடகருமான எஸ்பிபி சரண், “எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.