×

50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில்! அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்

தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்த பிகில் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகின்றன. அட்லி இயக்கத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான ’பிகில்’ படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்தூஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் வேட்டையிலும் சாதனை படைத்தது.
 

தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்த பிகில் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகின்றன. 

அட்லி இயக்கத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான ’பிகில்’ படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்தூஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் வேட்டையிலும் சாதனை படைத்தது. இந்த படம் வெளியாகி 50 நாட்களான நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 

 

அதில், “50 நாட்களைக் கடந்து உலக அளவில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக பிகில் மாறியுள்ளது. இதற்காக, படத்தை விரும்பி தியேட்டரில் பார்த்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து #50DaysOfIndustryHitBIGIL என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.