×

27 வருடங்களுக்குப் பிறகு கமல் செய்த காரியம்!

நடிகர் கமல் ஹாசன் 27 வருடங்களுக்குப் கழித்து தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார். பொள்ளாச்சி: நடிகர் கமல் ஹாசன் 27 வருடங்களுக்குப் கழித்து தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் தனது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். சிலர் இந்தியன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்டது என்ற செய்தியை நெட்டில் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதில் துளி அளவும் உண்மையில்லை. படத்தின் காட்சிகளை அவ்வப்போது போஸ்ட்
 

நடிகர் கமல் ஹாசன் 27 வருடங்களுக்குப் கழித்து தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

பொள்ளாச்சி: நடிகர் கமல் ஹாசன் 27 வருடங்களுக்குப் கழித்து தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் தனது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். சிலர் இந்தியன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்டது என்ற செய்தியை நெட்டில் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதில் துளி அளவும் உண்மையில்லை. படத்தின் காட்சிகளை அவ்வப்போது போஸ்ட் புரடக்ஷனுக்கு அனுப்பி வைத்து எடுத்த வரைக்கும் பார்ப்பதாக தெரிகிறது. இந்தப் பணிகளுக்காக சிறிய இடைவெளி விட நேர்கிறது. அந்த இடைவெளியிலும் கமல் மக்களை சந்தித்து   குறைகளை  கேட்டு வருகிறார். இதனால்தான் படம் முடங்கிப்போனது என்று செய்தி வெளியானது. 

ஆனால் இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. பொள்ளாச்சியின் ஒரு பகுதியில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பின் போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு ஷூட்டிங் வீட்டுக்கு போய் வந்திருக்கிறார் கமல். ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த வீடுதான் சிவாஜியின் வீடாக படத்தில் காட்டப்பட்டிருக்கும். முதன் முதலாக அப்படியொரு பங்களா இருப்பது தெரிந்ததே தேவர் மகன் படத்திலிருந்துதான். அந்த படத்திற்கு பிறகுதான் பல படங்களில் வர ஆரம்பித்தது. 

இந்த வீட்டில் இப்போது யார் இருக்கிறார்கள் என்று கேட்டு விட்டு அந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.1992 ம் ஆண்டு வெளியான படத்திற்கு பிறகு 27 வருடங்களுக்குப் கழித்து அந்த வீட்டிற்கு கமல் சென்று வந்திருக்கிறார். இவர் போனதும் வீட்டைப் பராமரித்து வந்தவர்கள் கமல் ஹாசனை வரவேற்று தேவர் மகன் நேரத்தில் சிவாஜி அமர்ந்திருந்த அதே நாற்காலியைப் போட்டு கமலை அமரவைத்தனர். சிறிது நேரம் பழைய நினைவுகளோடு அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு  புறப்பட்டு வந்திருக்கிறார்.