×

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு மிகப்பெரிய இழப்பாகும்… நடிகர் விஷால்

சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன் தாயார் ஜெயலட்சுமி மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால். மேலும், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கும், அவரது சகோதரர் தயாரிப்பாளர் ‘நல்லுசாமி பிக்சர்ஸ்’ தாய் சரவணனுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன் என்று தனது இரங்கலில் தெரிவித்துள்ளார் விஷால். வெண்ணிலா கபடிகுழு, நான்
 

சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன் தாயார் ஜெயலட்சுமி மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால். மேலும், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கும், அவரது சகோதரர் தயாரிப்பாளர் ‘நல்லுசாமி பிக்சர்ஸ்’ தாய் சரவணனுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன் என்று தனது இரங்கலில் தெரிவித்துள்ளார் விஷால்.

வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, கென்னடி கிளப், ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால், மாவீரன் கிட்டு, ஈஸ்வரன் படங்களை இயக்கியிருக்கும் சுசீந்திரன், நடிகர் விஷாலை வைத்து ‘பாண்டியநாடு’, ‘பாயும் புலி’படங்களை இயக்கியிருக்கிறார்.

ஆர்.கே.நகரில் தேர்தலில் விஷால் களம் இறங்கியபோது, ’’தமிழ் என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவர் யார் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவர். அரசியல் மாற்றம் வேண்டுமென்று நினைப்பவர். விஷாலுக்கு ஓட்டு போடுங்க. மக்களுக்காக உண்மையாக உழைப்பார். விஷாலுக்காக பிரச்சாரம் செல்வேன். மாற்றம் வராதா என்ற ஏக்கத்துடன் இருக்கும் தம்பிகள் விஷாலுக்கு ஓட்டு போடுவார்கள்’’ அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் சுசீந்திரன்.

இந்நிலையில், சுசீந்திரன் தாய் ஜெயலட்சுமி நேற்றூ மாரடைப்பினால் மரணம் அடைந்த செய்தி கேட்டு அவருக்கு இரங்கல் வெளியிட்டிருக்கிறார்.