×

2 கோடி சம்பளம் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி? ஏன் தெரியுமா? 

நடிகை சாய் பல்லவி 2கோடி சம்பளம் கொடுத்ததும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளார். சென்னை: நடிகை சாய் பல்லவி 2கோடி சம்பளம் கொடுத்ததும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளார். பிரேமம், ஃபிதா, மாரி 2 போன்ற படங்களுக்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழி படங்களிலும் நடித்து தனக்கு என ரசிகர்களை உருவாக்கியுள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் வரும்
 

நடிகை சாய் பல்லவி 2கோடி சம்பளம் கொடுத்ததும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளார். 

சென்னை: நடிகை சாய் பல்லவி 2கோடி சம்பளம் கொடுத்ததும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளார். 

பிரேமம், ஃபிதா, மாரி 2 போன்ற படங்களுக்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று  மூன்று மொழி படங்களிலும் நடித்து தனக்கு என ரசிகர்களை உருவாக்கியுள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான புரொமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நடிகை சாய் பல்லவி பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பல சுவார்ஸமான கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். அப்போது, அழகு சாதன கிரீம் விளம்பரத்தில் நடிப்பதற்கு பிரபல நிறுவனம் ரூ.2 கோடி சம்பளம் கொடுப்பதாகக் கூறியும் அந்த வாய்ப்பை ஏன் ஏற்கவில்லை? என்று கேள்வி எழப்பட்டது. 

அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, ‘நானும், எனது சகோதரி பூஜாவும் ஒரு முறை கண்ணாடி முன்பு நின்று கொண்டு இருந்தோம். அப்போது அவர், என்னை போல் சிவப்பாக இல்லை என்று கவலை கொண்டார். உடனே நான் அவளிடம் நீ அழகாக வேண்டுமென்றால் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அவரும் நான் சொன்னபடி செய்தார்.ஆனால் பூஜாவுக்குப் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவது பிடிக்காது. ஆனாலும் அதை சாப்பிட்டார். 

ஏனென்றால் பூஜாவுக்கு அழகாக வேண்டுமென ஆசை. அழகு என்பது என்னைவிட ஐந்து வயது இளைய பெண்ணுக்கு எத்தகைய தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பது என்னை ரொமபவும் காயப்படுத்தியது.  விளம்பரத்தால் கிடைக்கும் பணத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? எனக்குப் பெரிய தேவைகள் ஏதுமில்லை. 

மேலும் நிறத்துக்காக என் தங்கை மெனக்கெடுவதை பார்த்து கவலையாக இருந்தது. அதனால் நான் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.