×

102 கிலோ எடை; இது சமீரா ரெட்டியா? என்ன ஆச்சு அவங்களுக்கு?!..

நான் அதிக மன அழுத்ததில் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் ஒரு நல்ல தாயாக நடந்துகொண்டேன். வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் வந்தபோது கனவு கன்னி பட்டியலில் அவருக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களித்திருந்தனர். அதன்பிறகு பல நடிகைகள் வந்து சமீராவை ஓவர்டேக் செய்திவிட, பலர் அவரை மறந்தே போய்விட்டார்கள். 2014-ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற
 

நான் அதிக மன அழுத்ததில் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் ஒரு நல்ல தாயாக நடந்துகொண்டேன்.

வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் வந்தபோது கனவு கன்னி பட்டியலில் அவருக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களித்திருந்தனர். அதன்பிறகு பல நடிகைகள் வந்து சமீராவை ஓவர்டேக் செய்திவிட, பலர் அவரை மறந்தே போய்விட்டார்கள்.

2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்துகொண்டு சமீரா செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஹன்ஸ் வர்தே என்றொரு மகன் இருக்கிறார். தற்போது தன் இரண்டாவது குழந்தையை பிரசவிக்க காத்திருக்கிறார். ஹன்ஸ் பிறந்தபோது எடை அதிகரித்து 102 கிலோ ஆகிவிட்டார் சமீரா, அப்போதைய மனநிலை குறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

பிரசவத்துக்கு பின்னர் 32 கிலோ அதிகரித்துவிட்டேன், எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் சுத்தமாக குழம்பிப்போனேன், வீட்டைவிட்டு வெளியே சென்றால், இது சமீரா ரெட்டியா? என்ன ஆச்சு அவங்களுக்கு? என கேள்விகள் எழத்துவங்கியது. அது என்னை இன்னும் குழம்ப வைத்தது. நான் அதிக மன அழுத்ததில் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் ஒரு நல்ல தாயாக நடந்துகொண்டேன்.

மேலும் அவர், அலோபெசியா அரேட்டா என்ற நோயால் எனக்கு முடிகொட்ட ஆரம்பித்தது. ஆனால் என் கர்ப்பத்துக்கு அதனால் பாதிப்பு இல்லை. நான் என்னை மீட்டெடுக்க மிகவும் சிரமப்பட்டேன். பல்வேறு சிகிச்சைக்கு பிறகு நான் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தேன். ஒரு நடிகராக எப்படி இருந்தேன், ஒரு தாயாகவும் மனைவியாகவும் எங்கு இருக்கிறேன். ஒரு பெண்ணுக்கு பிரசவம் எப்படி அமையக் கூடாது என்பதற்கு நான் உதாரணம் என தெரிவித்துள்ளார்.