×

சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.51 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் உயர்ந்தது. நம் நாட்டில் கொரோான வைரஸ் பாதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவது, அமெரிக்க டாலரான எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் காணப்பட்ட போதும் இன்று பங்குச்சந்தைகள் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது குறைந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தம்
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் உயர்ந்தது.

நம் நாட்டில் கொரோான வைரஸ் பாதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவது, அமெரிக்க டாலரான எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் காணப்பட்ட போதும் இன்று பங்குச்சந்தைகள் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது குறைந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தம் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

எச்.டி.எப்.சி. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,552 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,403 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 207 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.204.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.51 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,128.08 புள்ளிகள் உயர்ந்து 50,136.58 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 337.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,845.10 புள்ளிகளில் முடிவுற்றது.