×

சென்செக்ஸ் 271 புள்ளிகள் வீழ்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி நஷ்டம்..

தொடர்ந்து 4 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 271 புள்ளிகள் வீழ்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின்
 

தொடர்ந்து 4 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 271 புள்ளிகள் வீழ்ந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

நெஸ்லே இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,441 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,790 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 124 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.229.83 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.74 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 271.07 புள்ளிகள் சரிந்து 52,501.98 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 101.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,767.55 புள்ளிகளில் முடிவுற்றது.