×

சென்செக்ஸ் 589 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள், லாப நோக்கம் கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் சன் பார்மா உள்பட 4 நிறுவன பங்குகளின்
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.08 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள், லாப நோக்கம் கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் சன் பார்மா உள்பட 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர்ரெட்டீஸ் மற்றும் மாருதி உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,382 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,529 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.186.12 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.08 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 588.59 புள்ளிகள் சரிந்து 46,285.77 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 182.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 13,634.60 புள்ளிகளில் முடிவுற்றது.