×

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஓ.என்.ஜி.சி.,
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம்.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பவர்கிரிட் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேசமயம் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,126 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,662 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.172.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.31 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 694.92 புள்ளிகள் சரிந்து 43,828.10 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 196.75 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,858.40 புள்ளிகளில் முடிவுற்றது.