×

’பஞ்சாயத்துக்கெல்லாம் பஞ்சாயத்து… பேசி தீர்க்க முடியாத பிக் பாஸ் 30-ம் நாள்

பிரச்சனைகளைத் தீர்க்க பஞ்சாயத்துக்கு போவாங்க… ஆனா, சண்டையே இல்லை… சத்தமே இல்ல… கண்டண்ட் தேத்தவே கஷ்டமா இருக்கு… அதனால இன்னிக்கு பஞ்சாயத்தைப் பேசி தீர்த்துக்கோங்க… என கோதாவில் இறங்கிவிட்டார் பிக்பாஸ். விளைவு ரணகளமானது நேற்றைய எப்பிசோட். 29-ம் நாள் தொடர்ச்சி… ‘இந்த எமோஜியில இருக்கிற மாதிரி உஷ்ஷ்ஷ்ஷ்னு பண்ணு’ என்பதாக அர்ச்சனாவிடம் ரியோவைச் சொல்ல, அவரும் செய்துகாட்டி ஹக் கொடுத்தார். இதை மட்டும் காட்டுறீங்கன்னா… இதிலேருந்து சண்டை இருக்கான்னு பார்த்தா கடைசி வரை அப்படி ஏதும் இல்ல…
 

பிரச்சனைகளைத் தீர்க்க பஞ்சாயத்துக்கு போவாங்க… ஆனா, சண்டையே இல்லை… சத்தமே இல்ல… கண்டண்ட் தேத்தவே கஷ்டமா இருக்கு… அதனால இன்னிக்கு பஞ்சாயத்தைப் பேசி தீர்த்துக்கோங்க… என கோதாவில் இறங்கிவிட்டார் பிக்பாஸ். விளைவு ரணகளமானது நேற்றைய எப்பிசோட்.

29-ம் நாள் தொடர்ச்சி…

‘இந்த எமோஜியில இருக்கிற மாதிரி உஷ்ஷ்ஷ்ஷ்னு பண்ணு’ என்பதாக அர்ச்சனாவிடம் ரியோவைச் சொல்ல, அவரும் செய்துகாட்டி ஹக் கொடுத்தார். இதை மட்டும் காட்டுறீங்கன்னா… இதிலேருந்து சண்டை இருக்கான்னு பார்த்தா கடைசி வரை அப்படி ஏதும் இல்ல…  என்ன பிக்கி எடிட்டிங்கில் மிஸ்ஸாகி வந்துடுச்சா?

30 -ம் நாள்

முதன்நாள் சுசித்ரா எல்லோர்கிட்டேயும் ஏத்தி விட்டதாலா என்னவோ… ‘ஏத்தி விட்டா… ஏத்தி விட்டா..”னு வர்ற ‘படிக்காதவன்’ படத்தின் ‘ஏய் வேலா…” பாடலை ஒலிக்க விட்டாங்க போல.

நேற்று ஆஜித்தின் பாட்டு கிளாஸ் மாதிரி, இன்னிக்கு ஷிவானியும் நவரச கிளாஸாம். அதெற்கெல்லாம் வாய்ப்பில்லையே ராசானு நினைச்சிட்டு இருந்தப்ப, அந்த நவரசத்தை ஆளுக்கொரு ஸ்பூன் காட்டுங்கனு சொத்தைப் பிரிச்சு வெச்சிட்டாங்க ஷிவானி.

ஒரு ரசத்தைக் காட்டறேன்னு முன்னுக்கு வந்த ஆரி, யாரையோ முறைச்சிப் பார்த்தார். கண்ணுலேருந்து தண்ணீர் வந்துட்டுச்சு. ஓ! அதுதான் அழுகையா? ‘நடிகன்டா… த்ரிஷா உனக்குத்தான்’ என்ற ரேஞ்சுக்கு ஏத்திவிட்டார்கள்.

அடுத்து வந்த சுரேஸ், நானே எல்லா ரசத்தை மிக்ஸ் பண்றேன்னுட்டு ஒவ்வொன்றாக காட்ட, ’கோபம்’ என்றதும் என்னைப் பார்த்து முறைக்க, ‘காதல்’ என்றதும் அர்ச்சனாவைப் பார்க்கிறன்னு நிஷா கலாய்ச்சதில் கந்தர்கோலமாயிட்டார் சுரேசு. ரொம்ப நாள் கழிச்சு நிஷாவின் காமெடி.

சுசி சொன்னதை தப்பா சொல்லிட்டாருன்னு பாலா ஒரு பக்கம் அணத்த, நேரடியா போய்ப் பேசுன்னு கேப்டன் சம்யுக்தா அட்வைஸினார். அதற்குள் பிக்பாஸ் வேற ஒரு வழியா இதை டீல் பண்ண ப்ளான் பண்ணியிருந்தார்.

விவாத மன்றம். அதாவது ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையை தனித்தனியாப் பேசிட்டு இருக்கீங்க. ’ஒரு மைதானம் கட்டித்தாரேன் ஒரே இடத்துல சண்டை போடுங்க’ வடிவேல் ஸ்டைலாட்டம் விவாத மன்றத்தைப் பத்தி விளக்கினார் பிக்கி. ஜட்ஜ் சுசித்ராவாம். ம்ஹூம்.

ஷனம் பற்றிய புகாரை பாலாவும் சுரேஷூம், ஆரி பற்றிய புகாரை சம்யுக்தாவும் எழுதினார்கள். வெளியே, ‘என் காதலை ஏத்துக்கல… அதனால பிக்பாஸைப் பற்றிதான் புகார் எழுதபோறன்னு நிஷா சொன்னதும் பிக்கியே ஜெர்க்காயிருப்பார். எல்லோருக்கும் பிக்பாஸ் செல்லம்ன்னா, பிக்பாஸ்க்கு செல்லம்னா அது நாந்தான்’னு சொல்லிட்டு இருந்தார் நிஷா. கேபி அப்படியே ஷாக்காயிட்டேனு ரியாக்‌ஷன் கொடுத்தார்.

அடுத்து வந்த ஷனம், பாலாவைப் பற்றி புகார் எழுத இன்னொரு அடிஷனல் ஷீட் வாங்கினதும் பிக்கியே ரொம்ப டயர்ட்டாகிட்டார். ’நானே ஷூகர் பேஷண்ட்’  ’பாலகுமாரா’ பசுபதியாட்டம், ரெஸ்ட் கேட்டார். உச்சபட்சம் என்னன்னா, ‘டேக் கேர்’னு பிக்பாஸ்க்கே ஆறுதல் சொல்லி ஷனம் வந்ததுதான்.

புகார் எழுத பிரேக் விட்டதும் ‘நீ என்ன பண்ணின’ என ஷனமை கலாய்ச்சப்பதான், ரெண்டு, மூணு அடிஷனல் ஷீட் கேட்டதைச் சொன்னார். சரிதான். ரெஸ்ட் வேணும்தான்.

பஞ்சாயத்து நம்பர் 1

பாலா vs ஷனம் தான் முதல் கேஸ். 1.அர்ச்சனாவைப் பத்தி புகழும்போது லெமன் விஷயத்தைச் சொன்னது விளையாட்ட்ய்க்கு, 2. முந்திரிக்கொட்டைன்னு சொல்ல சொன்னது உள்நோக்கமில்லாம சொன்னது, 3 தறுதலைன்னு சொன்னதும் ஜோக்குக்காக… இப்படி 1,2,3 நு வரிசைப்படுத்திட்டு, பிரச்ன்னை நடக்கும்போது கேக்காமல், ஆற அமர ஊற போட்டு அடிக்கிறாங்க யுவர் ஹானர்.

ஷனம் என்னை உதைச்சதுமாதிரி யார் செஞ்சா என்னை எவ்வளவு திட்டியிருப்பீங்கனு ஸ்டாப் பண்ணினார்.

‘குத்தம் குறைய மொத்தமா சொன்னா எப்படி ஒண்ணு ஒண்ணா சொல்லுங்க என்றதும், ஜெர்க்கானது ஜட்ஜ் அல்ல நாமதான். கேட்டுட்டு இருக்கிற நமக்கே ஞாபகம் வெச்சிக்க முடியுது. ஷனமால் முடியலையா… அப்பறம் நிதானமா யோசிச்சு ஒண்ணு ஒண்ணா பதில் சொன்னார்.

பாலாவுக்கு ஆதரவாக ஷிவானி (தனியா சொல்லனுமா என்ன?) சுரேஷ்,கேபி, சம்யுக்தா வர, ஷனமுக்கு ஆரி, ரம்யா என வந்து நின்றார்கள். சம்யுக்தா ரொம்ப ஹார்ஷா பாலாவுக்குச் சப்போர்ட் பண்ண, உங்கள கேப்டனாக்கினார்ன்னு ஓவரா சப்போர்ட் பண்ணாதீங்க. பிரச்ச்னையைப் பேசுங்கனு சூடானார் ஆரி. அப்பறம் அது பத்தியே கொஞ்ச நேரம் போனுச்சு. இரு தரப்பிலும் முட்டி மோத, ஜட்ஜ் ஓட்டெடுப்பு எடுத்து (!) பெரும்பான்மையினர் புண்பட வில்லையென பாலா வின்னர்னு தீர்ப்பு கொடுத்தார்.

வெளியே பாலா – சம்யுக்தாவும், ஆரி – அனிதாவும் பஞ்சாயத்து பற்றிய பின்கதை சுருக்கத்தை சுருக்கமாக பேசிட்டு இருந்தனர். ஆரி சுருக்கமானு சொன்னா நீங்க நம்பமாட்டீங்க… ஆனா, அதான் உண்மை.

பஞ்சாயத்து நம்பர் 2

இந்தப் பிராதும் ஷனம் மீதுதான். புகார் தாரர் சுரேஷ். ‘சம்பந்தம் இல்லாத இடத்துல மூக்கை நுழைச்சு பேசறாங்க’ என பொதுவான புகாராக இருந்ததால், பொதுவாக மறுத்தார் ஷனம். ஷனமுக்கு ஆதரவா முதல்ல வந்தது பாலா. அடுத்து ரம்யா, அனிதா.

அந்தப் பக்கம் சுரேஷ்க்கு அர்ச்சனா, சம்யுக்தா, கேபி, ஷிவானி என பெரும்கூட்டமே நின்றது.

கொடுத்திருக்கிற பிராதுக்கு சம்பந்தமே இல்லாம, ‘கிச்சன் சண்டைக்கு குறுக்கே வந்தாங்க. நாங்க போகச் சொன்னதும் போய்ட்டாங்க’ என்று அர்ச்சனா சொன்னதும் சரியான பாயிண்ட்டை பிடிச்சு, அதான் பேசாம திரும்ப வந்துட்டாங்களே… அப்பறம் எப்படி மூக்கை நுழைச்சாங்கனு சொல்றீங்க’னு வாதாடினார் ரம்யா. சபாஷ். ஒரு கட்டத்தில் அர்ச்சனாவைப் பார்த்து அவங்க சொல்றது பொய்ன்னு கத்தினார் ஷனம்.

ஒவ்வொரு தரப்புக்கும் குளோசிங் வக்கீல் ஆர்கிமெண்ட்டை பேச சொன்னார் ஜட்ஜ் சுசித்ரா. (நான் கிண்டாமலேயே இப்படி புரள்றீங்களே… என்ற சந்தோஷம் குரலில் தெரிஞ்சது) சுரேஷ்க்கு ஆதரவாக, ரியோ உப்பு சப்பு இல்லாமல் பேச, ஷனமுக்கு ஆதரவா, ஆஜானுபானுவாக பாலா பாயிண்ட்டுகளை முன்வைக்க, ஷனம் வெற்றி பெற்றார். உற்சாகத்தில் கத்தினார் ஷனம்.

இந்தப் பஞ்சாயத்தில் பாலாவின் நிலைபாடுதான் விசித்திரமாக இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு முன், ஷனம் பற்றி அவ்வளோ குறை சொல்லிட்டு, அதையே மாத்தி பேச எப்படி முடியுது இவரால்?

இதே கேள்வி ஹவுஸ்மேட்ஸ் வராதா என்ன? ஆரி – அனிதா உரையாடலில் ‘முதல்ல ஷனமை காலி பண்ணிட்டு, அப்பறம் அந்தப் பக்கம் நல்ல பேர் வாங்க வாதாடினான்’ என தன் விளக்கிட்டு இருந்தார்.

’உனக்கு ஆதரவா வந்த எங்களை அவமானப்படுத்திட்ட’னு அர்ச்சனா கோபமா சொல்ல, ‘யார் தோத்தாங்களோ… அவங்க பக்கம் நின்னு அவங்களை ஜெயிக்க வைக்கணும் அதான் கெத்து’னு ஒரு பன்ச் பேசிட்டு போனார். சரியாக ரிஜிஸ்டர் ஆகல, ரீ டேக் போயிடலாம்னு பிக்பாஸ் கேட்கறதுக்குள்ள காட்சி மாறிட்டு.

டைனிங் டேபிளில் இந்தப் பஞ்சாயத்து மீண்டு வந்தது. அர்ச்சனா அண்ட் கோ படை சூழ ஷனமை மிரட்டிட்டு இருந்தாங்க. அதற்குள் பாலா கட்சி மாறி அர்ச்சனா பக்கம் வந்திருந்தார். (நல்லா கேம் ஆடுறீங்க பாஸூ) ஷனம் கேட்டது எளிமையான ஒரு கேள்விதான். சம்பந்தம் இல்லாத இடத்துல மூக்கை நுழைச்சு பிரச்சனை பண்றீங்க’ இதுதான் ஷனம் மீதான புகார். ஆனால், அர்ச்சனா சொன்னது ‘சண்டை நடக்குது ஓடிப்போயிடு’னு சொன்னதுமே திரும்ப போய்ட்டாங்க. அப்பறம் எப்படி நான் மூக்கை நுழைச்சேன்?

ஆனால், இந்தக் கேள்வியை அர்ச்சனா உட்பட யாருமே உள்வாங்காமல், ‘நான் தப்பு பண்ணிட்டேன்… வந்து கட்டிப்பிடிச்சுக்கவா?’னு ஷனம் கேட்கணுனு நினைச்சாங்க. அது ஷனமிடம் நடக்கல. கடும்கோபத்துல, ‘நான் பொய் சொல்லல…சொல்லவும் மாட்டேன்’ என அழுதுகொண்டே வெளியேற அனிதா, ரம்யா, சுரேஷ், ஆரி ஓடிப்போய் சமாதானப்படுத்தினார்.

சுரேஷிடம் ஷனமின் கேள்வியை நிதானமாக ரம்யா சொன்னதும், ‘அடடா… இப்பதான் புரியுது நான் உள்ளே போய் கேட்கிறேன்’னு சொல்லி சுரேஷ் கிளம்பறத்துக்குள்ள, ‘நீங்க இங்கே ஒரு மாதிரி, அங்கே ஒரு மாதிரி பேசறீங்க’னு ரம்யா வார்த்தையை விட சூடானார் சுரேஷ்.

அதே வேகத்துல உள்ளே போனவர், பிரச்சனைக்கு உரிய கேள்வியை விளக்காமல், ‘என்னை அப்படி சொல்லிட்டாங்க’னு ஆதங்கப்பட்டார். ரம்யா சொன்னது சரிதானே சுரேஷூ.

இவ்வளவு சண்டை அமளி துமளி பறக்குது, நிஷா நிதானமா ஏதோ வெச்சு சாப்பிட்டு இருந்தார். பொழைக்க தெரிஞ்ச புள்ள. ‘அர்ச்சனாவின் வளர்ப்பு தம்பியாவே இருக்காதே’னு அட்வைஸிட்டு இருந்தார் ஆரி. ‘நீயெல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆயிட்டேன்’ என்ற லுக் விட்டாலும் சைலண்டாக உள்ளே போய்ட்டார் ரியோ.

அனிதா இப்போ கிரேட் 1 பாஸாகி விட்ட நினைப்பில், ஷனமிடம் ‘யார் அட்வைஸையும் கேட்காதே’னு அட்வைஸிட்டு இருந்தார். நான் பொய்யே சொல்ல மாட்டேன். பொய் சொன்னா அது நானாக இருக்க மாட்டேனு பன்ச் டயலாக் தவிர எல்லாத்தையு பேசிட்டார் ஷனம்.

இரு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் ஓட, இறுதியாக அர்ச்சனா வந்து ஷனமிடம் தனியா பேசணும்னு கேட்க, ’நான் நேரடியா பெரிய நாட்டாமைக்கிட்டேயே பஞ்சாயத்தை முடிச்சிக்கிறேன்’னு டீல் பண்ணினார். ‘ஓகே… கூல்’னு கிளம்பிட்டார் அர்ச்சனா. கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்த சம்யுக்தா ‘ஓஹோ’னு பார்த்துட்டு இருந்தார்.  அப்ப இந்த வாரக் கடைசியில குறும்படம் இருக்கு… அதைப் பார்த்ததுதான் ஷனம் கேரக்டர் ஜூலியா, ஓவியாவான்னு புரியும்… (ஓவியா ஆர்மி மன்னிக்க. ஒரு ப்ளோவுல வந்துட்டுச்சு)

’சும்மா இருந்த என்னை சொறிஞ்சு உட்டுடாங்கடா’ என ஷனமை கிளப்பி விட்டுவிட்டார்கள். நாளைக்கு என்ன ஆகப்போவுதோ… ஆனால், கொஞ்ச நேரத்தில் அவங்களே அணத்திட்டு அமைதியாயிடுற ’நல்ல குணம்’ ஷனமிடம் இருப்பதால், புஷ்ஷ்னு போய்விடலாம்.

மத்தவங்க பஞ்சாயத்துக்கே சூடான சம்யுக்தாவும் ஆரியும் இவங்க ரெண்டு பேருக்குமே நாளைக்கு பஞ்சாயத்து இருக்கே. அதுக்கு எப்படி ஹீட்டாகப் போறாங்களோ… எத்தனை தலை உருளபோகுதோ… பிக்பாஸ்க்கு இந்த வாரம் கண்டண்ட்டுக்கு பஞ்சமில்லை என்ற சந்தோஷம் அவர் பின்கதை சுருக்கம் படிக்கும்போதே தெரிஞ்சுது. மங்களம்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.