×

உங்க காதல் கலர்ஃபுல்லா இருக்கா,கலவரமா இருக்கா…எதுவா இருந்தாலும் கட்டம் சரியா இருக்கணும்!

அணுவணுவாய் சாவதென்று தீர்மானித்த பிறகு,காதல் சரியான வழிதான் என்று கவிஞர் அறிவுமதி ஒரு கவிதை எழுதியிருப்பார். அணுவணுவாய் சாவதென்று தீர்மானித்த பிறகு,காதல் சரியான வழிதான் என்று கவிஞர் அறிவுமதி ஒரு கவிதை எழுதியிருப்பார்.வாழ்க்கையில் இந்த காதல் வலையில் சிக்காதவர்களே இல்லை! கள்ளக் காதல்,நல்ல காதல் என்று நாட்டில் எவ்வளவோ பேர் பரபரப்பா இருந்தாலும்,சிலருக்கு வாழ்க்கையில் காதல் என்ற அத்தியாயமே இல்லாமல் போகிற கொடுமையும் நடந்துக்கிட்டுதான் இருக்கு! என்னத்த சொல்றது…’காதலிக்கவும் கட்டம் சரியா இருக்கணும் குமாரு’ன்னு சொல்லுது
 

அணுவணுவாய் சாவதென்று தீர்மானித்த பிறகு,காதல் சரியான வழிதான் என்று கவிஞர் அறிவுமதி ஒரு கவிதை எழுதியிருப்பார்.

அணுவணுவாய் சாவதென்று தீர்மானித்த பிறகு,காதல் சரியான வழிதான் என்று கவிஞர் அறிவுமதி ஒரு கவிதை எழுதியிருப்பார்.வாழ்க்கையில் இந்த காதல் வலையில் சிக்காதவர்களே இல்லை! கள்ளக் காதல்,நல்ல காதல் என்று நாட்டில் எவ்வளவோ பேர் பரபரப்பா இருந்தாலும்,சிலருக்கு வாழ்க்கையில் காதல் என்ற அத்தியாயமே இல்லாமல் போகிற கொடுமையும் நடந்துக்கிட்டுதான் இருக்கு!

 
என்னத்த சொல்றது…’காதலிக்கவும் கட்டம் சரியா இருக்கணும் குமாரு’ன்னு சொல்லுது அஸ்ட்ராலாஜி.அப்படியா என்று ஆச்சர்யப்படுறத நிறுத்திட்டு கீழே சொல்லியிருக்கிற ராசி பலனில் உங்கள் ராசியை முதலில் படியுங்கள்.சரியா இருந்தால்,உங்கள் நண்பர்களின் நிலமை கலர்ஃபுல்லா இருக்கா…கலவரமா இருக்கான்னும் பார்த்துக்கலாம்.
 ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வெயிட்டா இருந்தான் என்றால், அவர்களுடைய முகம்,எதிராளியை சுண்டி இழுக்கிற அளவுக்கு வசீகரமா இருக்குமாம்.ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஏழாம் இடம் திருமணத்திற்கு என்று சொல்லப்பட்டாலும்,லக்னாதிபதியும்,சுகாதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் காதல் கை கூடும். 
 
உதாரணமாக ஏழாமிடத்தில் ஒருவருக்கு சந்திரனோ சுக்கிரனோ ராகுவோ இருந்தால் கட்டாயம் காதல் திருமணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது கட்டம்.சரி,உங்க கட்டம் சரியா இருக்கான்னு பாருங்க..

 

மேஷம்: இவர்களுக்கு குடும்பாதிபதியும் – சப்தமாதிபதியும் சுக்கிரன். எனவே இவர்களுக்கு காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்.தனது நேர்மையான நடவடிக்கைகளால் எதிர் பாலினத்தினரை கவர்ந்து இழுப்பார்கள். இவர்களை நிறைய பேர் காதலிப்பார்கள்.ஆனால் காதல் சம்பந்தமான விஷயங்களில் நெளிவு சுளிவாக இருக்க மாட்டார்கள்.
 
சரி,இதுக்கு அப்பறமாவது கொஞ்சம் நெளிவு,சுளிவாக இருக்கப் பாருங்க பாஸ்!

 
ரிஷபம்: சுகத்திற்கும் சுத்தத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள்.இந்த ராசியில்தான் சந்திரன் உச்சமடைவார்.எனவே காதலிப்பதற்காகவே இந்த ராசிக்காரர்கள் பிறந்தவர்கள்.தாங்கள் விரும்பும் நபரை தன் பக்கம் இழுபதில்அபார திறமை கொண்டவர்கள்.தன்னை விரும்புபவருக்கு பிடிக்கும் விஷயங்களாக செய்து தன் பக்கமே அவர்களை வைத்திருக்கும் வித்தை அறிந்தவர்கள்.
 
நல்லா இருங்க பாஸு…

 
மிதுனம்: இந்த ராசிக்காரர்களை விட இவர்களை விரும்புபவர்கள் வேகமாக இருப்பார்கள்.நிதானமாக அனைத்து முடிவுகளையும் எடுப்பதால் இவர்களுடைய காதல் விளக்கெண்ணைய் மாதிரி பிசுபிசுக்கும் வாய்ப்பு அதிகம்.தன்னை காதலித்தவர்களின் நிலையை இவர்கள் உணரும் போது காலம் கடந்திருக்கும்.
 
நிலைமை,கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு!

கடகம்: காதலிப்பதற்காகவே பிறந்த ராசிகளில் இந்த ராசியும் ஒன்று. சந்திரனை ராசிநாதனாகக் கொண்டதால் வட்ட முகமும்,அழகான கூந்தலும் இவர்களுக்கு அமைந்திருக்கும்.இவர்கள் வாழ்வில் காதல் என்பது நிச்சயம் உண்டு.சீக்கிரமே உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள். குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் பாசத்திற்கும் அடிமையாய் இருப்பவர்கள்.
 
செம!

 
சிம்மம்:
இவர்களுடைய கண் வசீகரம் உடையதாக இருக்கும். இவர்களுக்கு தைரியாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் சுக்கிரன்.காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் விரும்புபவர்கள்.இவர்கள் ராஜகிரகம் என்று அழைக்கக்கூடிய கிரகமான சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் வலுவை உடையவர்கள்.
 
கலவரமாக இருப்பவர்கள்,இவரை அணுகலாம்…

 
கன்னி: காதலிப்பதற்காகவே பிறந்தவர்கள் இவர்கள்.முதல் காதல் தோற்றுப் போனால் கூட மீண்டும் இவர்களுக்கு வரிசையா  காதல் வந்துக்கிட்டேதான் இருக்கும். இவர்கள் ராசியில் தான் சுக்கிரன் பலமிழந்து காணப்படுவார்.இருப்பினும் இந்த ராசியில் சந்திரன் பலமிருப்பதால் முகம் மிகவும் வசீகரம் உடையதாக இருக்கும். காதல் விஷயத்தில் இவர்கள் எப்போதும் நம்பர்-1. 
 
ராசியே அப்படி இருந்தால் இப்படித்தான்!

துலாம்: இவர்களுக்கு ராசிநாதனும் அஷ்டமாதிபதியும் சுக்கிரன்.காதல் இவர்களுக்கு கை வந்த கலை. சீக்கிரமே அனைவரையும் தன் பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள்.காதலில் வெற்றி பெற பொறுமை மிகவும் அவசியம். 
 
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சும்மாவா சொன்னாய்ங்க!

 
விருச்சிகம்: இவர்களுக்கு,தான் காதலிப்பவர்களை விட தன்னைக் காதலிப்பவர்களை அதிகமாக பிடிக்கும்.எப்போதுமே போர் வீரன் போல் காட்சியளிப்பதால் காதல் கை கூடுவதற்கு காலம் பிடிக்கும்.
 
எவ்வளவு நாள்தான் ஆகும்னு பார்த்திர வேண்டியதுதான்… 

 
தனுசு: காதலருக்கு கடிதம் எழுதினால் அதை அவரிடம் கொடுக்காமல் அவர்களுடைய பெற்றோரின் கையில் கொடுக்கும் அந்நியன் அம்பி அளவிற்கு நேர்மையானவர்கள். 
 
இந்தக் காலத்தில் இப்படி ஒரு அப்பாவியா..!

 
மகரம்: காதல் என்பது இவர்களுக்கு மிக முக்கியமான விஷயமாகும்.காதல் என்பது இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களுடைய காதல் தவறாக இருக்காது. காதல் என்பது ஆத்மார்த்தமாக இருக்கும்.
 
கடைசிவரை அப்படியே இருந்துருங்க பாஸூ… 

கும்பம்: காதலைப் பற்றி இவர்களுக்கு கடுமையான கற்பனை இருக்கும். காதல்தான் வாழ்க்கை என்ற அளவுக்கு  இவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
 
சரி,அதையும்தான் செஞ்சு பாத்துருவோம்!

மீனம்: இந்த ராசியில்தான் சுக்கிரன் உச்சமாக இருப்பார்.இவர்களிடம் அன்பும்,பொறுமையும்,அழகும், வசீகரமும் நிலைத்திருக்கும்.இவர்களை யார் நேசிக்கின்றார்களோ அவர்களை இவர்கள் நேசிப்பார்கள்
 
ஃபேஸ்புக் இன்பாக்ஸ் நிரம்பி வழியுதான்னு செக் பண்ணனுமே!

 

இதையும் வாசிக்க: ஜாதகத்தில் இந்த இடத்தில் மட்டும் ராகு, கேது இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது…