×

30-5-2021 தினப்பலன் – ஞாயிறு… மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 16 I ஞாயிற்றுக்கிழமை I மே 30, 2021 மே 30, 2021 – இன்றைய ராசிபலன் மேஷம் ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம். வேலையின் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கை கையாள்வது நல்லது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. ரிஷபம் சுமாரான நாளாக
 

பிலவ வருடம் I வைகாசி 16 I ஞாயிற்றுக்கிழமை I மே 30, 2021

மே 30, 2021 – இன்றைய ராசிபலன்

மேஷம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம். வேலையின் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கை கையாள்வது நல்லது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் நிதானத்தை கைவிட்டுவிட வேண்டாம். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தடைகள், தடங்கல் ஏற்படும். நிதானத்தை கைவிடாமல் செயல்பட்டால் சாதகமான பலனை பெறலாம். கணவன் மனைவி இடையே புரிதல் குறைந்து காணப்படும். நிதி நிலை சுமுகமாக இருக்காது.

மிதுனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். இதற்கு மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப் புழக்கம் சிறிதளவு காணப்படும்.

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். முழு ஈடுபாட்டுடன் வேலையை செய்வீர்கள். சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் மனதை செலுத்துவது அமைதியைத் தரும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. திட்டமிட்டு விழிப்புணர்வோடு இருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே பிணக்கு ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணத் தேவையை சமாளிக்க கடன் வாங்கும் நிலை வரலாம்.

கன்னி

ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். நிதானமாக செயல்படுவதன் மூலம் பிரச்னைகளை, தடைகளை சமாளிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வழக்கமான வேலையைக் கூட முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

துலாம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள், உங்களிடம் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

துடிப்பான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எனவே, இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

தனுசு

முயற்சிகளில் வெற்றிபெற கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். நம்பிக்கையைத் தளர விடாமல் செயல்படுங்கள். வேலைச் சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.

மகரம்

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். எனவே, சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் ஏற்படும். கணவன் மனைவி இடையே வீண் பிரச்னைகள் வரலாம். எனவே, வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சாதகமான பலன்களை அனுபவிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு, புரிதல் அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.

மீனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதீத மகிழ்ச்சி காரணமாக எது சரி எது தவறு என்று தீர்மானிக்க முடியாமல் திணறலாம். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.