×

27-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு சவாலான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 16 I திங்கட்கிழமை I மார்ச் 29, 2021 29-3-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது. வெற்றி பெற இலக்கை நோக்கி சிறிது முயன்றாலே போதும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ரிஷபம் வளர்ச்சிக்கான நாளாக இருக்கும்.
 

சார்வரி வருடம் I பங்குனி 16 I திங்கட்கிழமை I மார்ச் 29, 2021

29-3-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது. வெற்றி பெற இலக்கை நோக்கி சிறிது முயன்றாலே போதும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

ரிஷபம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். முன்னேற்றத்தைக் காண சில தடைகள் வந்தாலும் அனைத்தையும் திறம்பட எதிர்கொள்வீர்கள். வேலையில் பரபரப்பான சூழல் காணப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இனிமையாக நடந்துகொள்வதன் மூலம் கணவன் மனைவி இடையே நல்லுறவைப் பராமரிக்கலாம். பண வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான நாளாக மாற்றலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நேரம் ஒதுக்கி நிதானமாகப் பேசுவதன் மூலம் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியைத் தக்க வைக்க முடியும். சிலருக்குப் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. வீண் செலவு அதிகரிக்கும்.

கடகம்

மனதில் தைரியத்தை அதிகரித்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை வெற்றிகரமானதாக மாற்றலாம். வேலை, தொழில் இடத்தில் சாதகமான சூழல் நிலவும். வேலையில் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே திருப்தியான மனநிலை நிலவும். நிதி நிலை இயல்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

மனதில் கோபம், பயம், பதற்றம் அதிகரிக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிப்படுத்தினால் சிறப்பான நாளாக அமையும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. வீண் செலவு அதிகரிக்கும்.

கன்னி

ஏற்ற இறக்கம் என இரண்டும் சமமான நாளாக இருக்கும். வேலையில் ஈடுபாடு குறையும். இதனால் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் வேலை பார்ப்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்பட இனிமையாக பேசுவது நல்லது. பண வரவு ஓரளவுக்கு இருக்கும்.

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வெற்றிபெற நம்பிக்கையுடன் போராட வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். கணவன் மனைவி இடையே அமைதியை தக்க வைக்க நிதானமாகச் செயல்படுவது முக்கியம். பண இழப்புக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் திறம்படச் செயல்பட்டு, உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு

அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சிறப்பான சூழல் நிலவாது. உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

மனதில் அமைதி குறைந்து பதற்றம் அதிகரிக்கும். பதற்றத்தைத் தவிர்ப்பதன் மூலம் இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். வேலையைத் திட்டமிட்டு முன்கூட்டியே முடிக்க முயல்வீர்கள். இதன் காரணமாக வேலையில் தவறு நேர்வதைத் தடுக்கலாம். கணவன் மனைவி இடையே குழப்பமான மனநிலை நிலவும். நிதி நிலை சிறப்பாக இருக்காது. வீண் செலவு ஏற்படும்.

கும்பம்

குழப்பமான நாளாக இருக்கும். நம்பிக்கை குறையும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகளும் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட வேண்டும். கணவன் மனைவி இடையே அமைதி குறையும். இனிய வார்த்தைகளை பேசுவதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்காது.

மீனம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். இலக்கை அடைய உறுதியுடன் செயல்படுவீர்கள். வேலையில் ஆற்றல் வெளிப்படும். முழு திறமையை வெளிப்படுத்தி வேலையை முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்குப் பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

toptamilnews.com