×

16-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்னை வரலாம்!

சார்வரி வருடம் I மாசி 4 I செவ்வாய்க்கிழமை I பிப்ரவரி 16, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் வரும். அவற்றைச் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பில்லை. செலவு அதிகரிக்கும். ரிஷபம் திருப்திகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 

சார்வரி வருடம் I மாசி 4 I செவ்வாய்க்கிழமை I பிப்ரவரி 16, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் வரும். அவற்றைச் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பில்லை. செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

திருப்திகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்

தெளிவான தினமாக இன்றைய நாள் இருக்கும். முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் வெற்றி காண்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

பதற்றமான தினமாக இருக்கும். மனதில் அமைதி குலையும். குழப்பம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பிரச்னை ஏற்படலாம். விட்டுக் கொடுப்பதன் மூலமும் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் இன்றைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. செலவு அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று கூடுதல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழில் வழக்கம் போல செல்லும். கூடுதல் கவனத்துடன் வேலையைச் செய்யும்போது தவறுகள் நேராமல் தடுக்கலாம். குடும்பத்தில் அமைதியை தக்க வைக்க சகஜமாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை சரியாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே சுமுகமான உரையாடல் இருக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்றைய நாள் சாதகமாக இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்றைய நாள் சுமாராக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையலாம். இன்றைய தினத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கலாம். கணவன் மனைவி இடையே உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். பண வரவுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. செலவு அதிகரிக்கலாம்.

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். மனக் குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். எனவே, இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் சலிப்பு ஏற்படும். இன்றைய தினம் வார்த்தையில் கவனம் தேவை. உங்கள் வாயிலிருந்து வார்த்தை காரணமாக குடும்பத்தினர் வேதனைப் படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை.

மகரம்

உங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் நாள் இன்று. இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். புதிய காரியங்களைத் தொடங்கலாம். வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குப் பண வரவுக்கான வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

கும்பம்

கவனமின்மைக் காரணமாக சில பாதிப்புகளைச் சந்திக்க நேரிடலாம். கவனத்துடன் இன்றைய நாளில் செயல்பட்டால் சாதகமான பலன்களைப் பெற முடியும். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் சில தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

மீனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். காரியத் தடை ஏற்படலாம். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரி இடையே மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். கவனத்துடன் செயல்படுவதன் மூலம் இவற்றைத் தவிர்க்க முடியும். செலவு அதிகரிக்கும். நியாயமான காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.