கள்ளக்குறிச்சி அருகே அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை!

 

கள்ளக்குறிச்சி அருகே அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே முன்விரோதம் காரணமாக அமமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த ஜி.பி.தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் அமமுகவில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை தனது விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கோவிந்தன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை!

அப்போது, கோவிந்தன் விளை நிலத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட கோவிந்தனுக்கும், அவரது உறவினர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால், அவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.