‘மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரிடமும் ஒற்றுமை தேவை’ – அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை!

 

‘மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரிடமும் ஒற்றுமை தேவை’ – அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை!

மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரிடமும் ஒற்றுமை தேவை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

‘மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரிடமும் ஒற்றுமை தேவை’ – அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

‘மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரிடமும் ஒற்றுமை தேவை’ – அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை!

அதேபோல் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக இருக்கிறது; தேவைப்பட்டால் தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்பதைத் தெரிவிக்க அடையாள போராட்டத்தை அறிவிக்கலாம். மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டும் என்றார். அத்துடன் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பாஜக எதிர்க்கும்; தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கட்சி வித்தியாசம் இல்லாமல் இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.