ஒருநாள் விட்டு ஒரு நாளே வங்கிகள் இயங்கும்?

 

ஒருநாள் விட்டு ஒரு நாளே வங்கிகள் இயங்கும்?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் கொரோனாவால் 311 பேர் ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழப்பு 17ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணி வரையே அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன.

ஒருநாள் விட்டு ஒரு நாளே வங்கிகள் இயங்கும்?

அந்தவகையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருந்த நிலையில், இன்று முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் அசோசியேசன்ஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ”வங்கிகள் காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கவேண்டும், வங்கி கிளைகள் மதியம் 12.00 மணி வரை திறந்திற அனுமதி வழங்கவேண்டும், வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் மட்டுமே இயங்கவும், அத்தியாவசிய சேவைகளான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகளே மட்டுமே செய்யவும் அனுமதிக்க வேண்டும். அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி படுத்தவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.