சென்னையில் நாளை முழு நேர பொதுமுடக்கம் – காவல் ஆணையர்

 

சென்னையில் நாளை முழு நேர பொதுமுடக்கம் – காவல் ஆணையர்

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முழுநேர பொதுமுடக்கம் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டினார் காவல் ஆணையர் விஸ்வநாதன்

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை எந்த தளர்வும் கிடையாது. நள்ளிரவு முதல் முழு நேர பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும். புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ளது.நுழைவுத் தேர்வுக்கு தனியாக E – Pass தேவையில்லை. மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு மையத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

சென்னையில் நாளை முழு நேர பொதுமுடக்கம் – காவல் ஆணையர்
இன்று ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றிய 4424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று பறிமுதல் செய்யப்பட்டதோடு மொத்தம் 6421 ஆக அதிகரித்துள்ளது. பொதுமுடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு என்பது முழுமையாக உள்ளது” என தெரிவித்தார்.