கொரோனாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், ஆராத்யா குணமடைந்து விட்டனர்: அபிஷேக் பச்சன் ட்வீட்
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர்களை தொடர்ந்து, நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதி மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் குணமடையவில்லை என்று வீடியோ வாயிலாக அமிதாப் பச்சன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து ஐஸ்வர்யா ராயும் ஆராத்யாவும் குணமடைந்து விட்டதாக அமிதாப் பச்சனின் மகனும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆக்கியுள்ளனர். அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Thank you all for your continued prayers and good wishes. Indebted forever. ????????
Aishwarya and Aaradhya have thankfully tested negative and have been discharged from the hospital. They will now be at home. My father and I remain in hospital under the care of the medical staff.— Abhishek Bachchan (@juniorbachchan) July 27, 2020