‘பேட்டி குடுக்கிறியா பேட்டி’ எம்எல்ஏ-க்கு ஆப்பு வைத்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

 

‘பேட்டி குடுக்கிறியா பேட்டி’ எம்எல்ஏ-க்கு ஆப்பு வைத்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

‘பேட்டி குடுக்கிறியா பேட்டி’ எம்எல்ஏ-க்கு ஆப்பு வைத்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன். திமுக சார்பாக 1996 ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்ற இவர் பின் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றார்.இருப்பினும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அவருக்கு பதில் சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரன் என்பவரை அதிமுக முன்னிறுத்தியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த சந்திரசேகரன் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அத்துடன் இன்று எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கலும் செய்தார்.

‘பேட்டி குடுக்கிறியா பேட்டி’ எம்எல்ஏ-க்கு ஆப்பு வைத்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

இந்நிலையில் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் , கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல் ,கழக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் எம்எல்ஏ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.