அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 18 ஆம் தேதி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்(80) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

வயது முதிர்வின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மதுசூதனின் உடல்நிலை இன்று காலை மிகவும் கவலைக்கிடமானதாக தகவல்கள் வெளியாகின. அவரது உடல்நிலை பற்றிய செய்தி அறிந்து அதிமுக நிர்வாகிகள் பலர் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில், மதுசூதனன் இன்று மாலை 3.42 மணி அளவில் காலமானார். அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மதுசூதனின் மறைவுக்கு அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.