அதிமுக பிரமுகர் கொலை..2 முறை கொலை முயற்சி ; 6 தனிப்படை தீவிர வேட்டை!

 

அதிமுக பிரமுகர் கொலை..2 முறை கொலை முயற்சி ; 6 தனிப்படை தீவிர வேட்டை!

அதிமுக பிரமுகர் திருமாறன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க, 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருமான திருமாறன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். திருமண நாளையொட்டி மறைமலை நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் , திருமாறனை கொலை செய்தனர். இதில் திருமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர் எழிலரசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் கொலையாளிகளை நோக்கி சுட்டதில் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். திருமாறன் மனைவி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுக பிரமுகர் கொலை..2 முறை கொலை முயற்சி ; 6 தனிப்படை தீவிர வேட்டை!

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை போலீசார் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கூறும் மறைமலைநகர் போலீசார் , தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை திருமாறனை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடைமுறையில் இருந்ததால் துப்பாக்கி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அவரை மிரட்டி பணம் கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.