’நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே இயக்கம் அதிமுக தான்’’-அமைச்சர் பெஞ்சமின் பேச்சு!

 

’நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே இயக்கம் அதிமுக தான்’’-அமைச்சர் பெஞ்சமின் பேச்சு!

திருவள்ளுர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதற்கான சான்றுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

’நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே இயக்கம் அதிமுக தான்’’-அமைச்சர் பெஞ்சமின் பேச்சு!

இதையடுத்து அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நீட் தேர்வை எதிர்த்து போராடக்கூடிய ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அதிமுக தான் என தெரிவித்தார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக தான். அதை தற்போது மறைத்து கபடநாடகம் ஆடி வருகிறார் ஸடாலின். அதிமுகவில் ஒரு சிறு தொண்டன் கூட அமைச்சர் பதவியில் அங்கம் வகிக்கலாம் . ஆனால் திமுகவில் அப்படி இல்லை குடும்ப அரசியலை செய்து வருவதாக
கூறினார்.

’நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே இயக்கம் அதிமுக தான்’’-அமைச்சர் பெஞ்சமின் பேச்சு!

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம்,முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹிம், மாவட்ட செயலாளர்கள் ரமணா,மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.