அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி!

 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜி இன்று உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், நேற்று ஒரேநாளில் 29,272பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14லட்சத்து 38ஆயிரத்து 509ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஒரேநாளில் 7,466பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 298 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,178ஆக அதிகரித்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.ராஜி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். 2011-16 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த ராஜி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் இரங்கல் கூறி வருகின்றனர்.