அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

 

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ  பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

மக்கள் நீதி மய்யத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா தன்னை இணைத்துக்கொண்டார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ  பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுகவுடன் பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ள நிலையில் 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் அதிமுக இன்று பாமகவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ  பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளர். வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ. கருப்பையா போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்றும் கூறியுள்ளார்.மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான பழ.கருப்பையா அதிமுக , திமுக என மாறிமாறி பயணித்த நிலையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது