ஜெயலலிதா கோயிலில் தீக்குளித்த தொண்டர் பரிதாப பலி!

 

ஜெயலலிதா கோயிலில் தீக்குளித்த  தொண்டர் பரிதாப பலி!

ஜெயலலிதா கோயிலிலில் தீக்குளித்த அதிமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா கோயிலில் தீக்குளித்த  தொண்டர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தே.கல்லுப்பட்டி சந்தையூரை சேர்ந்தவர் பழனிசாமி. 57 வயதான இவர் தன்னை வாக்குச்சாவடி முகவர் பணிக்கு சேர்க்கவில்லை என அப்பகுதி அதிமுக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அவரை முகவர்பணிக்கு சேர்த்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா கோயிலில் தீக்குளித்த  தொண்டர் பரிதாப பலி!

இதனால் விரக்தியடைந்த அவர் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலுக்கு சென்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் படுகாயம் அடைந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக தொண்டர் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.