“கருணாநிதி செய்தது கேவலமான செயல்”

 

“கருணாநிதி செய்தது கேவலமான செயல்”

வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் குமரி மக்களவை இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 7 ஆம் தேதி நாகர்கோவில் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொன் . ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

“கருணாநிதி செய்தது கேவலமான செயல்”

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன், “மக்கள் மத்தியில் முதல்வர், துணை முதல்வருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும்.தேமுதி க கட்டாயம் எங்கள் கூட்டணிக்கு வரும்.

“கருணாநிதி செய்தது கேவலமான செயல்”

நான்கு முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தேர்தல் வாக்குறுதியாக சொன்ன, விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்தாரா? தமிழகத்தில் அந்தளவிற்கு நிலம் இல்லை என்பது இப்பதான் தெரிய வருகிறது என்றார். இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை.திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள். அதேபோல் தான் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 7 வாக்குறுதியும் ஏமாற்று வாக்குறுதிகள் ” என்றார்.