மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்!

 

மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்!

தமிழகத்தில் கோடைக்காலம் நிலவுவதால் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலையில், மக்களை இன்னும் வாட்டி வதைக்க கடந்த 4 ஆம் தேதி தமிழகத்தில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்!

அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றால் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக நம் மீது விழுவதாகும். அச்சமயம் வெயில் அதிகமாகி மக்களுக்கு தோல் நோய் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததன் படி, தமிழகத்தின் பல இடங்களில் வெயில் சுட்டெரித்தது. அதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, குழந்தைகளும் முதியவர்களும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மே, 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கத்திரி வெயில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதன் படி, இன்றோடு கத்திரி வெயில் முடிவடைகிறது. இதன் பிறகு வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.