இன்னும் இரண்டு நாட்களில் கத்திரி வெயில் நிறைவு.. 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

 

இன்னும் இரண்டு நாட்களில் கத்திரி வெயில் நிறைவு.. 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கத்திரி வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இது போதாதென்று, வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தையும் இழுத்து சென்று விட்டது. இதனால் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் கத்திரி வெயில் நிறைவு.. 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 2 நாட்களில் கோவை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தேனி, தென்காசி,நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் கத்திரி வெயில் நிறைவு.. 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வேலுார், ராணிப்பேட்டை, கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என்றும் மக்கள் வீட்டை விட்டு மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளை மறுநாளுடன் நிறைவடைவதால் வெப்பம் சற்று அதிகரித்தே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.