கொரோனா பாதிப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்!

 

கொரோனா பாதிப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு இன்று இரண்டு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக ஆயிரத்தைக் கடந்துவருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் பரவலில் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒருசில தொற்றின் தீவிரத்தால் உயிரையும் இழக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்!

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொற்று கண்டறியப்பட்டது. உடனே அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்றின் தீவிரம் குறைந்ததால் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். முன்னதாக அவரது மகளுக்கு 6ஆம் தேதி தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அன்றே தடுப்பூசி எடுத்துக்கொண்டார் பினராயி.